சமாதியாகும் வரலாறு
மகாபாரதமும் இராமாயணமும்
புளித்துப்போனது
கசந்து போனது
எங்களது
அறத்தேடல்களுக்கு
இங்கு
மாயையாய் பதில்
அடுக்கடுக்காய்
நகரும் பொழுதுகள்
மிடுக்காய் ஒன்றுமில்லை
தொலைந்துபோனதும்
தொலைத்ததும்
தவறியதும்
தவறவிட்டதும்
ஒரு போகிக்குள்
சாம்பலானது
மருட்டிப் பார்க்கும்
உலகப் பந்து
உருப்படியாய்
வாழ்வதற்கு தடயம் இல்லை.
கைகளின் முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
வாய்களுக்குப் பூட்டு
சுதந்திரம்
என்ன விலை?
உலகச் சந்தையில் பேரம்.
ஒரு சொட்டு
மூச்சுத் துளி
திணறிய
நாசிகளின் புலம்பல்
விரிந்து கிடக்கும்
பூமி
நம்மைப் பார்த்து
கைவிரித்தவாறு.
உதிரம் சிந்தியவர்களாய்
மேடைகளில் முழக்கம்
நாட்டை
விளைத்தவர்களாய்
ஏடுகளின் தலையங்கம்
விமர்சனவாதிகளின்
வெண்சாமரம்
புழுதிக்குள் புதைந்துபோகும்
தரவுகள்
ஒன்றும் தெரியாததாய்
புதிய விடியல்
சலவை செய்த
சூரியனின் புறப்பாடு
சிசுக்களுக்கு
கருவிலே மறக்கக்கற்றுக் கொடுக்கும்
வியூகம்
நமது தடயங்கள்
ஆடைகள்
களையப்பட்டு
நிர்வணமாய் வந்தேறிகள்
விலா எழும்புகளை
வில்லாய் முறித்து
தூக்கி நிறுத்திய
முதல் தலைமுறை
இன்றைய தலைமுறை
தேசியத்தில்
அடையாளத்தை
அடகு வைத்து
அந்நியமாய்
மாலை
ஒளித் துளிகளை
உறிஞ்சியவாறு
மெல்ல நகரும்
இருள் மேகங்கள்
இருட்டுக்குள்
எல்லாமே சமாதியாய்
நமது வரலாறும்.
No comments:
Post a Comment