Tuesday, 11 February 2014

போராட்டங்கள்



போர்முனைகளில்
கூராயுதங்கள்
அணு ஆயுதங்களும்
கண்டிராத போராட்டம்

ஒவ்வொரு துளியாய்
நனையும் 
வாழ்க்கையின் முனைகள்

வெளிச்சப்படலத்தின்
வெளிநடப்பு
தற்காலிகமாய் ஒத்திவைப்பு

இப்பொழுது
காற்றும்
கற்றுக் கொண்டது
அவலங்களைக்
காதுகொடுத்துக் கேட்பதற்கு

எங்கள் பெயரும்
சிம்மாசனங்களில்
முன்மொழிவு
ஒரு சுவடிப்பு !

இங்கு எல்லாமே
வாடிக்கையானது
விழுந்தவர்களுக்கு!
வேடிக்கையானது
பார்ப்பவர்களுக்கு!

சிகரங்களைத் தொடுவதற்கு
வரிசையாய்ப்
போடப்பட்ட ஏணிகள்
கால்மிதிகள் இல்லாமல்

தேடல்களின் முயற்சிகள்
அரும்புவிடும்
நம்பிக்கை மொட்டுகளை
இரசித்தவாறு

உச்சங்களில்
இழுத்துச் சேர்ப்பதாய்
நின்று கொண்டு
வேடிக்கைக் காட்டும் கூட்டம்

ஏணிகளைப் பிடித்தவாறு
நாங்கள்
யார் ஏறுவது?
யார் தூக்கிவிடுவது?
போராட்டம்

இன்னும் தீர்ந்த்தாய் இல்லை
போராட்டம்
ஏக்கத்தோடு ஏணிகள்
நாளைய விடியல்களை
அடகு வைத்தவாறு !


No comments:

Post a Comment