Tuesday, 11 February 2014

நான் நானில்லை...



நினைவிலில்லை
மறந்துபோகிறது
ஞாபகப்படுத்துவதற்கு

ஒவ்வொரு கோணத்திலும்
தோய்வுகளில்
சரியும் தேகம்

அத்துமீறிய
இருள் திரள்கள்
ஒரு வெளிச்சத்திற்குள்

மறந்துபோன
மறதி கூட்டுக்குள்
முனகல்

விரிந்துகிடக்கும்
பாதைகளில்
முடமான பாதம்

விடியலில்கூட
மூடியே கிடக்கும்
விழிகள்

வெறுமையாய்போன
பஞ்ச மூலங்களில்
அழுகிய வீச்சம்

விரல் இடுக்குகளில்
பற்றவைத்த
தீப்பந்தங்களில்
குளுமை

நானும் நானுமாய்
தேடிக்கொண்டிருக்கும்
நான்.


No comments:

Post a Comment