Tuesday, 11 February 2014

நலிந்த நம்பிக்கைகள்



தேர்வு முடிவுகள்
வானைப் பிளக்கும்
கைத்தட்டல்கள்

மாலைகளின் குவியல்களில்
முகங்கள் மறைந்துபோயின.

மனப்பாத்திரங்களில்
நிரம்பி வழியும்
பாராட்டுத் திரவகங்கள்

வரலாற்றுத் தரவுகளாய்
பதியம் செய்யும் ஏடுகள்

கனவுகளை மறந்து
நனவுகளில்
குளிர்காயும் முகங்கள்

வாசலிலும்
கம்பிகளிலும்
பதியம் செய்த விழிகள்

ஆசை அணைகளை
முட்டிக்கொண்டு
எதிர்ப்பார்ப்புகள்

வண்ணக்கலவையில்
தோய்த்து
சலவை செய்த மனங்கள்

மௌனமாய் நகரும்
போர்க் காலங்கள்
கால்களால்
கோலத்தை அழித்தவாறு

கருப்பு வானத்தின்
அந்தித் துளிகளில்
மெதுவாய் கலையும் சாயங்கள்

வழுக்கி விழும்
இரவுப் போர்வையில்
வெளிச்சத்தின் பூபாளம்

பனிப்பொழுதில்
மொட்டவிழும் பூக்கள்
வாடியவாறு.




No comments:

Post a Comment