Tuesday, 11 February 2014

திருவோடு ஒரு தெருவோடு



கோரிக்கைகள்
பேசிப் பேசியே
பழக்கப்பட்டுப் போய்விட்டது

எழுவதும், உழுவதும்
கட்டிலில் விழுவதுமாய்
நகரும் நாட்கள்

கனவுகளின் பட்டியலில்
அடுக்கடுக்காய்
வானத்தை முத்தமிடும்
நட்சத்திரக் குவியல்

பொதுமைப் பார்வையில்
பாரெங்கும் புதுமைகள் செய்தோம்

சுழற்றி எறியும் உடைகளாய்
ஒவ்வொன்றாய் இழந்தோம்
உடைமைகளை

அலட்சிய பூகம்பத்தில்
புதைந்தும் கலைந்தும்போன
பள்ளிகளும் கோவில்களும்

தொழிற்புரட்சி தோண்டிய
பிணக் குழிகளில்
சமாதியான தோட்டங்கள்

கேட்காமலேயே விட்டதால்
நாணத்தோடு விலகிச் செல்லும்
மறந்துபோன உரிமைகள்
சாணையில்லாமல் மழுங்கிக் கிடக்கும்
அரசியல் வாள்கள்

இருந்தும் என்ன?
மேடைகள் எங்கள் அழகுத் தமிழுக்கு
மணிமகுடங்கள்
அதனால் ஊரான் பிள்ளையை
நம்பிக்கையோடு ஊட்டி வளர்க்கின்றோம்

எங்கள் பிள்ளைகள்
தெருவின் மூலை முடுக்குகளில்
ஒரு விடியலில் வெளிச்சமாய்க்

கையில் திருவோடு!

No comments:

Post a Comment