ஜாலூர்
கெமிலாங்
காற்றில்
சிறகுகளை
மெல்ல வீசியவாறு
அசைகிறது
பெருமித உணர்வுகள்
நாடி நரம்புகளையெல்லாம்
சலவை செய்தவாறு
மௌனத்தின்
அடுத்த முனைகளில்
வரலாற்றுப் பதிவேடுகளில்
புழுதிகள்
அரை நூற்றாண்டில்
நிரம்பி வழியும்
சுதந்திர தேசம்
கத்தியும்
இரத்தமும்
யுத்தமும்
சாதிக்க முடியாததை
பேனா முனைகளின்
கூர்மையில்
சாதித்தோம்
மெல்லிய உணர்வுகளாய்
அசையும்
காற்றின் தாளத்திற்கு
அபிநயம்
முன்னேற்றத்தின்
முகவரிகளை
கைநீட்டி இழுத்தவாறு
மூவினத்தின்
கரங்களுக்கும்
முடிச்சுப் போட்டவாறு
காற்றில்
சிறகுகளை
மெல்ல விரித்தவாறு
இசைக்கும் தேசிய கீதம்
எங்கள் ஜாலூர் கெமிலாங்.
Nukilan:
En.G.Manimaran,smk mantin.
No comments:
Post a Comment