கவிப்பேரரசே
கறைபட்ட
உன் வரிகளை
நான்
எப்படிச் சுவாசிப்பது?
உன்னை
அடிக்கடி
என் மனச் சிலுவையில்
ஏற்றி
அறைய நேரிடுகிறது
தேனாடைகளாய்
உலா வரும்
உன் நூல்களைபோல
உன்
திரை வரிகள் இல்லையே?
அவை
பாடைகளை அல்லவா
காது மடல்களில்
தூக்கியெறிந்து
மனதை
மயானமாக்கிறது.?
மூச்செல்லாம்
தமிழென்கிறாய்
உன் பேச்சு
இனிக்கிறது
ஈரடி குறலாய்...
உனது
விரச வரிகளை
உரசும்போது
உறைந்துபோகிறோம்
குரல்வளை
நெறிக்கப்படுகிறது
மூச்சுக் காற்றில்
தீச்சுவாலைகள்
கவிஞனே
உன்
போலி பிம்பத்தைக்
கண்டு
நிழல் கண்ணாடியைக்
கட்டித் த்ழுவும்
குருடனல்ல
நான்
சில்லரைகளுக்காகத்
தன்மானச்
சிறகுகளை
முறிக்கிறாயே?
உனது
நொண்டிச் சிந்து
என்னை
நகைக்க வைக்கிறது
எனது
இளசுகள்
எழவேண்டுமென்று
முரசு
கொட்டுகிறேன்
ஆனால்
சலவை செய்யா
உனது
விரச வரிகளில்
வழுக்கி விழுந்து
பூப்பெய்துவதற்குள்
வாலிபத்தை
வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்
காதலைத்
தசை வசப்பட்டதாய்
அர்த்தப்படுத்திக் கொண்டு
பதின்மங்களில்
பித்துப்பிடித்துப்
பேய்களாய்த்
தெருக்களில்
விழிப்படலங்களில்
தீப்பந்தத்தை
வைத்தாற்போல
வழியெங்கும்
விரசங்கள்
காமத்தின்
உச்சத்தில்
குப்பை மேடுகளிலும்
கழிவறைகளிலும்
சிசுக்கள்
கொசுக்களாய்..
வேதனை
வேள்வியில்
மனம்
கொளுந்துவிட்டு
எரியும்போது...
தடா சட்டத்திற்கும்
டிமிக்கிக்
கொடுத்துவிட்டு
அலைவரிசைகளில்
காற்றோடு காற்றாய்
கொச்சைவரிகள்
உன்வரிகள்
கணினியின்
விடக்கிருமியைவிட
மூர்க்கமானது
மூன்று
வயது
குழந்தைக்கும்
உனது வரிகள்
திருமுலைப் பாலாய்
போதையில்
போத்தல்
நுனிமேல்
நடைபயிலும்
குடிகாரனுக்கும்
உன்
பாடல் வரிகள்
பல்லவியாய்
கவிஞனே
சமுதாயத்தின்
தன்மான ஆடையின்
கைத்தறி
உன் கையில்
நாளைய்
கொடிகளின்
கொம்பு
உன் தோள்களில்
நீ
நாளைய
நம்பிக்கை
நாட்களின்
நாட்காட்டி
அதனால்
உன் வரிகளை
முழுமையாய்
வெளுத்து
ஒரு உச்சிப்பொழுதில்
சலவை செய்!
இயக்கத்தை
முடுக்கிவிடு
என்
இனமானப் போர்க்களத்தில்
நீதான் தளபதி......!
No comments:
Post a Comment