Thursday, 24 March 2011

எழுத வேண்டும்

எழ்த வேண்டும்!
எழுந்த
எண்ண அலைகளின்
ஆர்ப்பரிப்பு

குடங் குடமாய்க்
கவலைகளைச்
சுமந்து வந்து
குறைகளுக்குச்
சாயம் பூசாது....

எழுத வேண்டும்
என்னுள்
எதார்த்தமாய்
எட்டிப் பார்க்கும்
எதிர்பார்ப்புகளை

சதா
அவலங்களை
அலசிப் பார்த்து
அலுத்துப் போனது
அவிந்த மனசு

மனச் சுவரில்
விரிசல்
விட்டிருந்தது
பாழாய்ப் போன
பழைய பல்லவி

நிரூபிக்கப்படாத
பழியோடு
குற்றவாளிக் கூண்டில்
ஆயுள் கைதியாய்
என் நிழல்

மனித வெடிகுண்டாய்
மன சாட்சிகள்
சாட்சிகளையும்
காட்சிகளையும்
தகர்த்தெறிந்த
வண்ணமாய்

மனக்காட்டுக்குள்
தீயை வைத்து
புகைச்சலின்
படையெடுப்பில்
தவித்துக் கொண்டிருக்கிறேன்

விழிப்படலங்களில்
எரிமலையாய்த்
தீக்குழம்புகள்

எழுத வேண்டும்
உதிர்ந்துபோன
இரப்பர் மரங்களை
நிர்வாணமாய்ப் போன
காடுகளை

கற்பனக் காற்று
கடக்கும்போது
காதோரம்
மௌனமாய்ப்
பற்றவைக்கிறது

விழி முட்டி
ஒதுங்கிய
பனித்துளி
உலையாய்
உசுப்பிப் பார்க்கிறது
உடலை

எழுத வேண்டும்
மனக்கரைகளை
மோதும்
ஆசை அலைகளாய்
தேடல்களைத்
திரும்பிப் பார்க்கிறேன்

பழுதுபடாத
பாதைகளில்
காயத்தால் கழுவிய
பாதங்களின்
சுவடுகள்

எழுத வேண்டும்
மன அலைகளின்
ஆர்ப்பரிப்பு.......

No comments:

Post a Comment