வாழ்க்கை
ஒரு
அமுத சுரபி
என் கைகளில்
நாடோறும்
நிறைவாகவே சுரக்கிறது
ஒவ்வொரு
பொழுதும்
குறைவில்லாமல்
வழிகிறது
இன்பமும்
துன்பமும்
******************
மானுடம்
கோடரியின்
அசுரக் கரங்கள்
பதறாமல்
மரம்
மௌனமாய்ப் பேசியது
காது மடல்களை
உரசிய இரகசியம்
"மனிதா
உன்னை நேசிக்கின்றேன்"
*******************
விடைபெறுதல்
விடிவெள்ளி
அடிவானில்
நிலவு
காத்திருந்தது
கதிரவனின்
வரவிற்கு
நன்றி
சொல்லி
விடைபெறுவதற்கு.
****************
வாழ்க்கை
விடியல்
ஒரு கனவு
நாம்
உணர்வுகளோடு
ஒன்றிப்போனோம்
பலிக்கும்
என்றார்கள்
விடியல் கனவு
விழித்துப்
பார்த்தேன்
நாம் இன்னும்
அந்நியர்களாய்
பல நிறங்களில்...
***************
கடந்தவை
சன்னலோரம்
ஒரு சாயுங்காலம்
வெறித்திருந்தேன்
வழிப்போக்கனாய்
கடந்துபோன
அனுபவங்கள்
ஒரு கணம்
நின்றது
வேடிக்கையாய்ச்
சிரித்தது
கடந்துபோனது
சில மணித்துளிகளில்...
************************
ஆசை முகம்
கால்கள்
நிலைக்குத்தின
குளக்கரையோரம்
நிலவின்
பிம்பம்
கண்ணாடியாய்
தீண்டும்
தென்றலின்
மெல்லலைகள்
அலைக்கழிக்கிறது
அவளது
ஆசை முகம்.
********************
நிழல்
நான் யார்?
என்னுள்
வேள்வியாய்
வினாக்களின்
படையெடுப்பு
நிழல்
அமைதியாய்ச்
சிரித்தது.
*****************
விபத்து
நமது
சந்திப்பு
ஒரு விபத்து
எதார்த்தமாய்
நீ
அள்ளி வீசிய
புன்னகை
முகமனுக்காக
உதிர்ந்த
ஓரிரு சொற்கள்
இன்னும்
காத்திருக்கிறேன்
காயப்பட்ட
இதயத்தோடு...
******************
ஞான ஒளி
இருள்
தவம் களையும்போது
ஒளி
மௌனமாய்
நுழைகிறது
சில
உண்மைகளைத்
தோளோடு
சுமந்து கொண்டு.
No comments:
Post a Comment